search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-மங்களூரு இடையே சிறப்பு ரெயில் திருப்பூர், கோவை வழியாக இயக்கம்
    X

    கோப்பு படம்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-மங்களூரு இடையே சிறப்பு ரெயில் திருப்பூர், கோவை வழியாக இயக்கம்

    • 6-ந் தேதி, அடுத்த மாதம் 2-ந் தேதி தாம்பரத்தில் இருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூருவுக்கு சென்றடையும்.
    • 27-ந் தேதி, அடுத்த மாதம் 3-ந் தேதி இரவு 11 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் மதியம் 3.15 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

    திருப்பூர்:

    ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம்-மங்களூருவுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வருகிற 26-ந் தேதி, அடுத்த மாதம் 2-ந் தேதி தாம்பரத்தில் இருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூருவுக்கு சென்றடையும். இந்த ரெயில் சேலத்துக்கு இரவு 9.30 மணிக்கும், ஈரோட்டுக்கு 10.35 மணிக்கும், திருப்பூருக்கு 11.28 மணிக்கும், கோவைக்கு 12.37 மணிக்கும் செல்லும்.

    இதுபோல் வருகிற 27-ந் தேதி, அடுத்த மாதம் 3-ந் தேதி இரவு 11 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் மதியம் 3.15 மணிக்கு தாம்பரத்தை அடையும். இந்த ரெயில் கோவைக்கு காலை 6.27 மணிக்கும், திருப்பூருக்கு 7.13 மணிக்கும், ஈரோட்டுக்கு 8 மணிக்கும், சேலத்துக்கு 9.02 மணிக்கும் வந்து செல்லும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×