search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவிநாசி அருகே சத்துணவுக் கூடத்துக்குள் புகுந்த பாம்பு
    X

    கோப்புடம்.

    அவிநாசி அருகே சத்துணவுக் கூடத்துக்குள் புகுந்த பாம்பு

    • பாம்பை சமூக ஆா்வலா் பிடித்து வனப் பகுதியில் விடுவித்தாா் .
    • 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

    அவினாசி :

    சேவூா் அருகே சாலைப்பா ளையம் அரசு நடுநிலைப் பள்ளி சத்துணவுக் கூடத்துக்குள் புகுந்த பாம்பை சமூக ஆா்வலா் பிடித்து வனப் பகுதியில் விடுவித்தாா். அவிநாசி வட்டம், சேவூா் அருகே சாலையப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், இங்குள்ள சத்துணவுக் கூடத்துக்குள் திங்கள்கிழமை மதியம் திடீரென 3 அடி நீளமுள்ள பாம்பு புகுந்தது.

    இதைப் பாா்த்த சத்துணவுப் பணியாளா்கள், சமூக ஆா்வலரும், பாம்பு பிடிப்பதில் பழக்கப்ப ட்டவருமான விஜய்க்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த விஜய் பாதுகாப்பான முறையில் பாம்பை பிடித்து வனப் பகுதியில் விடுவித்தாா்.

    Next Story
    ×