search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டுக்கு புதிய நீதிபதி நியமனம்
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டுக்கு புதிய நீதிபதி நியமனம்

    • கடந்த 1½ ஆண்டாக இந்த பணியிடம் காலியாகவே இருந்து வருகிறது.
    • உத்தரவை சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் தனபால் பிறப்பித்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் முதல் மற்றும் 2 வது கூடுதல் மாவட்ட கோர்ட்டுகள் செயல்படுகின்றன. இதில் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாகப் பணியாற்றிய கோவிந்தராஜ் கோவைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.கடந்த 1½ ஆண்டாக இந்த பணியிடம் காலியாகவே இருந்து வருகிறது. இதனால் இக்கோர்ட்டில் வழக்கு விசாரணைகள் தாமதமாகி வந்தது.

    தற்போது கும்பகோணம் விரைவு நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்த பத்மா, திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் தனபால் பிறப்பித்துள்ளார்.

    Next Story
    ×