என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும் - ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
- குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும் ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
- சிறப்பு ஓய்வூதிய பெறும் அனைவரையும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும்.
திருப்பூர்:
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 7-வது மாவட்ட பேரவை கூட்டம் திருப்பூர் மங்கலம் பாதை கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் சண்முகம் கொடியேற்றினார். துணை தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் குணசேகரன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில துணை தலைவர் அரங்கநாதன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் செயலாளர் அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் நிசார் அகமது, திருப்பூர் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் மணியன், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் நாட்ராயன், ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ரீட்டா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், ஊர்புற நூலகர் போன்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கமுடேசன் பிடித்த காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், சிறப்பு ஓய்வூதிய பெறும் அனைவரையும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்