என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ஊதியூரில் 4 மாதங்களாகியும் வனத்துறை பிடியில் சிக்காத சிறுத்தை
- குடியிருப்புகளுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது
- சிறுத்தையின் கால் தடங்களைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்
காங்கயம்,ஜூலை.6-
திருப்பூா் மாவட்டம் ஊதியூா் வனப் பகுதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வந்த சிறுத்தை, அங்கு பதுங்கியிருந்து மலையடிவாரப் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது.
இதையடுத்து காங்கயம் வனத் துறையினா் ஊதியூா் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சிறுத்தை நட மாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் வைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். சிறுத்தை இருப்பது உறுதி செய்யப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். வனப்பகுதிக்குள் கூண்டுகளும் வைத்துள்ளனா். ஆனால் இதுவரை சிறுத்தையைப் பிடிக்க முடியவில்லை.மலைப் பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியேறும் சிறுத்தை கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் ஊதியூா்-காசிலிங்கம்பாளையம் பகுதியில் உள்ள குப்புதுரை என்பவரது தோட்டத்துக்குள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு புகுந்த சிறுத்தை அங்குள்ள ஆட்டுப்பட்டியில் இருந்த ஒரு வெள்ளாட்டுக் குட்டியை தூக்கிச் சென்றது. தகவலி ன்பேரில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, சிறுத்தையின் கால் தடங்களைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
மேலும் வனத் துறையினா் சிறுத்தையைப் பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.






