search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கலூரில் மோட்டார் சைக்கிளை திருடிய சிறுவன்
    X

    கோப்புபடம்.

    பொங்கலூரில் மோட்டார் சைக்கிளை திருடிய சிறுவன்

    • மளிகை கடையின் முன்பு அவர்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தனர்.
    • அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில், கோவை -திருச்சி தேசிய நெடு ஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான மளிகை கடை ஒன்று உள்ளது. இந்த மளிகை கடையின் முன்பு அவர்களது மோ ட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் சம்பவ த்தன்று சுமார் 3 மணியளவில் கடைக்கு வந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் கடையில் குளிர்பானம் வாங்கி குடித்ததுடன், கடை யின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு திருடி சென்றார். இந்தநிலையில் கடையின் உரிமையாளர் வெளியில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உடனடியாக அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது கடைக்கு வந்த அந்த சிறுவன் மோட்டார் சைக்கி ளை எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது.

    இது குறித்து அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.புகா ரின் அடிப்படையில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கி ளைத் திருடி சென்ற சிறுவன் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×