search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரத்தில் டிராக்டர் மோதி 2 வயது குழந்தை பலி
    X

    கோப்புபடம்

    தாராபுரத்தில் டிராக்டர் மோதி 2 வயது குழந்தை பலி

    • டிராக்டர் ஒன்று பின்னோக்கி வந்து கொண்டிருக்கும்போது குழந்தை மீது மோதியது.
    • குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் கோழிப்பண்ணை உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த அன்சாய் பசு மாட்டாரி அவரது மனைவி ஆசாரி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதில் புஞ்சா என்ற ஆண் குழந்தை உள்ளது.

    நேற்று மாலை அப்பகுதியில் டிராக்டர் ஒன்று பின்னோக்கி வந்து கொண்டிருக்கும்போது புஞ்சை மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×