search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுத தயாராகும் 87,509 மாணவ-மாணவிகள்
    X

    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுத தயாராகும் 87,509 மாணவ-மாணவிகள்

    • எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
    • திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பிளஸ்-2 செய்முறைத்தேர்வு பிப்ரவரி மாதம் 12-ந் தேதியும், பிளஸ்-1 செய்முறைத்தேர்வு பிப்ரவரி மாதம் 19-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. செய்முறைத்தேர்வு பிப்ரவரி மாதம் 23-ந் தேதியும் தொடங்குகிறது.

    பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 1-ந் தேதியும், பிளஸ்-1 தேர்வு மார்ச் மாதம் 4-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் மாதம் 26-ந் தேதியும் தொடங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 33 ஆயிரத்து 445 மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 பொதுத்தேர்வை 28 ஆயிரத்து 376 பேரும், பிளஸ்-2 பொதுத்தேர்வை 25 ஆயிரத்து 688 பேர் என மொத்தம் 87 ஆயிரத்து 509 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுத தயாராகி வருகிறார்கள்.

    Next Story
    ×