என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுத தயாராகும் 87,509 மாணவ-மாணவிகள்
- எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
- திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் :
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பிளஸ்-2 செய்முறைத்தேர்வு பிப்ரவரி மாதம் 12-ந் தேதியும், பிளஸ்-1 செய்முறைத்தேர்வு பிப்ரவரி மாதம் 19-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. செய்முறைத்தேர்வு பிப்ரவரி மாதம் 23-ந் தேதியும் தொடங்குகிறது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 1-ந் தேதியும், பிளஸ்-1 தேர்வு மார்ச் மாதம் 4-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் மாதம் 26-ந் தேதியும் தொடங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 33 ஆயிரத்து 445 மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 பொதுத்தேர்வை 28 ஆயிரத்து 376 பேரும், பிளஸ்-2 பொதுத்தேர்வை 25 ஆயிரத்து 688 பேர் என மொத்தம் 87 ஆயிரத்து 509 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுத தயாராகி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்