என் மலர்
உள்ளூர் செய்திகள்

கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்த காட்சி.
உடுமலை தமிழக-கேரள எல்லையில் ஒரே நாளில் 526 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை
- வாகன ஓட்டிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் நிபா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
- பரிசோதனை செய்த 526 பயணிகளில் யாருக்கும் காய்ச்சல் கண்டறியப்படவில்லை.
உடுமலை:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உயிர்கொல்லி நோயான நிபா வைரசுக்கு இரண்டு பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினரால் தமிழக கேரளா எல்லையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான ஒன்பதாறு சோதனைச் சாவடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் கண்காணிப்பு பணியை தொடங்குமாறு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் ஒன்பதாறு சோதனை சாவடியில் பரிசோதனை மேற்கொள்வதற்கு மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர்,செவிலியர் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.அந்த குழுவினர் 24 நேரமும் கேரளாவில் இருந்து கேரளாவில் தமிழகத்திற்குள் வருகின்ற வாகன ஓட்டிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் நிபா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அப்போது காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடுமலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் அமராவதி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிந்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.நேற்று நடைபெற்ற முகாமில் 111 வாகனங்களில் தமிழகத்திற்கு வருகை தந்த 526 பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அப்போது யாருக்கும் காய்ச்சல் கண்டறியப்படவில்லை. இந்த பணியில் சுகாதாரத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






