என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடுமலை திருப்பதி கோவிலில் கும்பாபிஷேக 4-ம் ஆண்டு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
- வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை இந்த கோவில் சன்னதியில் உள்ள சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர் ,தன்வந்திரி பெருமாள் ,கருட ஆழ்வார் ,ஆஞ்சநேயர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடந்தது.
- வெள்ளிக்கிழமை கோவில் கும்பாபிஷேகம் விழாவை ஒட்டி காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை ஹோமம், நவகலச ஸ்தாபிதம், வெங்கடேச பெருமாள், மூலவர், உற்சவர் திருமஞ்சன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
உடுமலை :
உடுமலை தளி ரோட்டில் பள்ளபாளையம் அருகே செங்குளத்தின் கரையில் அமைந்துள்ளது உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவில் கும்பாபிஷேக 4 ம்ஆண்டு விழா வெங்கடேச பெருமாளின் அவதார உற்சவ விழாவாக இரண்டு நாட்கள் நடந்தது. வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை இந்த கோவில் வளாக சன்னதியில் உள்ள சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர் ,தன்வந்திரி பெருமாள் ,கருட ஆழ்வார் ,ஆஞ்சநேயர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து மாலை 5 மணி முதல் 7 மணி வரை பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகியோருக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு கள்ளப்பாளையம் சீனிவாச பெருமாள் பஜனை கோஷ்டி யினரின் பஜனையும் பிருந்தாவனம் நிகழ்ச்சியும் நடந்தது.
இன்று வெள்ளிக்கிழமை கோவில் கும்பாபிஷேகம் நான்காம் ஆண்டு விழாவை ஒட்டி காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை ஹோமம் , நவகலச ஸ்தாபிதம் ,வெங்கடேச பெருமாள், மூலவர், உற்சவர் திருமஞ்சன நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் புலவர் குரு சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய பெருமாள் திருமொழி நூல் வெளியிடப்பட்டது .
தொடர்ந்து காலை 11 மணிக்கு விசேஷஅலங்கார பூஜை, மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் உற்சவர் வழிபாடு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி பாலாஜி சாரிட்டபிள் ட்ரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன். அறங்காவலர்கள் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்து இருந்தனர். இதில் உடுமலை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்