search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் மரங்களை வெட்டியதாக 4 பேருக்கு அபராதம்
    X

    கோப்புபடம்

    திருப்பூரில் மரங்களை வெட்டியதாக 4 பேருக்கு அபராதம்

    • 10 முதல், 15 ஆண்டுக்கு மேலான 6 மரங்களை அங்குள்ள சிலர் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதியின்றி, வெட்டினர்.
    • நில வருவாய் ஆய்வாளர் கோமதி, விசாரணை மேற்கொண்டு, தாசில்தார் மகேஸ்வரனிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி, 7வது வார்டு போயம்பாளையம் குருவாயூரப்பன் லே - அவுட் கிழக்கு பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த 10 முதல், 15 ஆண்டுக்கு மேலான 6 மரங்களை அங்குள்ள சிலர் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதியின்றி, வெட்டினர். இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் நில வருவாய் ஆய்வாளர் கோமதி, விசாரணை மேற்கொண்டு, தாசில்தார் மகேஸ்வரனிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

    இந்தநிலையில் மரங்களை வெட்டியதற்காக போயம்பாளையம் குருவாயூரப்பன் லே - அவுட் கிழக்கு பகுதியை சேர்ந்த ஏஞ்சல் என்பவருக்கு 4 ஆயிரத்து 572 ரூபாய், குருவாயூரப்பன் நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு 12 ஆயிரத்து, 544 ரூபாய், குருவாயூரப்பன் நகர் பூங்கா வீதியைச் சேர்ந்த கமலம் என்பவருக்கு 3 ஆயிரத்து, 816 ரூபாய், குருவாயூரப்பன் நகர் வடக்கு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு 3 ஆயிரத்து, 560 ரூபாய் அபராதம் விதித்து தாசில்தார் உத்தரவிட்டார்.

    Next Story
    ×