என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே லாரி டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
- துரைசிங்கம், சந்திரசேகரன், சரவணன் ஆகிய 3பேரும் லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்கள்.
- சமையல் பொருட்கள் வாங்கியதில் ஒருவருக்கொருவர் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையை சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் துரைசிங்கம் (வயது 27). அதுபோல் சிவகங்கை சோழபுரத்தை சேர்ந்த ராமு என்பவரது மகன் சந்திரசேகரன் (32). கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் ( 21 ). இவர்கள் 3பேரும் காரணம்பேட்டை அருகே உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அங்கேயே தங்கி சமையல் செய்து சாப்பிட்டும் வருகிறார்கள். இதில் சமையல் பொருட்கள் வாங்கியதில் ஒருவருக்கொருவர் பிரச்சனை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சந்திரசேகர் மற்றும் சரவணன் ஆகியோர் துரை சிங்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதில் துரைசிங்கத்தை இருவரும் பலமாக தாக்கினார்கள். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து துரைசிங்கம் பல்லடம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்திரசேகரன் மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்