என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது
    X

    கோப்புபடம்

    பல்லடம் அருகே வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது

    • ரொக்கம் ரூ.21,ஆயிரம் , வெள்ளி கொலுசு ஒரு ஜோடி, ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
    • வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கரடிவாவி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பொன்னுசாமி, ரேசன் கடை ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் மற்றும் குடும்பத்தார் வெளியில் சென்ற போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த ரொக்கம் ரூ.21,ஆயிரம் , வெள்ளி கொலுசு ஒரு ஜோடி, ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

    இதேபோல பொன்னுசாமி வீடு அருகே உள்ள வள்ளியம்மாள் (வயது 60) என்ற மூதாட்டி வீட்டிலிருந்த புதிய எல்.இ.டி. கலர் டிவி ஒன்றும் திருடப்பட்டது. இதுகுறித்து அவர்கள் இருவரும் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் உள்ள கரடி வாவி சோதனை சாவடியில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் போலீசார் விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் மணிகண்டன் (வயது 32), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முருகன் (வயது 37) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், வெள்ளி கொலுசு ஒரு ஜோடி, கலர் டிவி, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×