என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிரிப்டோகரன்சி முதலீடு மூலம் திருப்பூர் வாலிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி
    X

    கிரிப்டோகரன்சி முதலீடு மூலம் திருப்பூர் வாலிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி

    • குழுவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியிருந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 32). இவரது செல்போன் எண் ஒரு வாட்ஸ்-அப் குழுவில் சேர்க்கப்பட்டது. அந்த குழுவில் உள்ளவர்கள் சமூகவலைதள சேனல்களுக்கு பணம் செலுத்தி அதனை குழுவில் பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது தொடர்பாக பேசிக்கொண்டனர்.

    தொடர்ந்து மணியும் அந்த குழுவில் கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து சில தொகையை பெற்றார். பின்னர் மணியை டெலிகிராம் குழுவில் இணைத்தனர். அந்த குழுவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியிருந்தனர்.

    இதை நம்பிய மணி பல்வேறு வங்கி கணக்குகள் மற்றும் 14 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.18 லட்சத்து 90 ஆயிரம் அனுப்பினார். அதற்கான லாபத்தை எடுக்க முயன்ற போது மேலும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டுமென அறிவிப்பு வந்துள்ளது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மணி, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×