என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி தொழிலாளி பலி
- ரோட்டை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் கண்ணடிகுப்பம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் மாயன் (வயது 50).கூலித்தொழிலாளி.
இவர் நேற்று இரவு மின்னூர் மின்வாரிய அலுவலகம் அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாயன் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட மாயன் சம்பவம் இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் மாயன் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
Next Story






