search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதி பெண் படுகாயம்
    X

    லாரி மோதி பெண் படுகாயம்

    • டிரைவர் கைது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி லாரி ஷெட் பகுதியை சேர்ந்தவர் கவியரசு என்பவரின் மனைவி வசந்தி (வயது 42).

    இவர் காலையில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 11ம் தேதி அதிகாலை சாலை நகர் பகுதி அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த லாரி ஒன்று முன்னே சென்ற காரை முன்ந்தி செல்ல முயன்ற போது திடீரென வசந்தி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இதனையடுத்து அங்கிருந்தவர்கள் வசந்தியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

    பின்னர் இதுகுறித்து கவியரசு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து மதுரை வாடிப்பட்டி அடுத்த அவாடமருதூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×