என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் சு.பள்ளிப்பட்டில் கிராம சபை கூட்டம்
- தூய்மை காவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள சு. பள்ளிப்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சைனாம்பாள் சுப்ரமணி தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் சிந்து காந்தி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குவதை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்வது.
மேலும் ஊராட்சியில் சாலை வசதி தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மண்டல வட்டாட்சியர் உட்பட பல கலந்துகொண்டு தூய்மை காவலர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கி பேசினார்கள். இறுதியில் ஊராட்சி செயலாளர் துரைமுருகன் நன்றி கூறினார்.
Next Story