search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் வாலிபர் கைது
    X

    தொழிலாளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் வாலிபர் கைது

    • கல்லை எடுத்து தாக்கினார்
    • சிறையில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த வெங்கடாசமுத்திரம் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40).கூலி தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று ஆம்பூர் பைபாஸ் சாலை வந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அன்பரசன் என்பவருக்கும் ரமேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த அன்பரசன் அருகே உள்ள கல்லை எடுத்து ரமேஷை தாக்கி கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து ரமேஷ் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு அன்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×