search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளி மாநில மது விற்ற வாலிபர் கைது
    X

    வெளி மாநில மது விற்ற வாலிபர் கைது

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • சிறையில் அடைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை சுற்று பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணி ஈடுபட்டனர்.

    அப்போது அண்ணாண்டப்பட்டி, அம்பேத்கர் நகர் பகுதியில் கள்ள சாராயம், மது பாட்டில்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த வாலிபரை போலீசார் விரட்டி மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 34) என்பதும் இவர் வெளிமாநில மது பாக்கெட்டுகளை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 15 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×