என் மலர்
உள்ளூர் செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தீர்மானம்
- கெஜல்நாயக்கன்பட்டியில் கிராம சபை கூட்டம் நடந்தது
- தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
திருப்பத்தூர்:
கந்திலி ஒன்றியம் கெஜல் நாயக்கன்பட்டி ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
கிராம சபை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது, சாலை, குடிநீர், தெரு விளக்கு வசதி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை விரைந்து மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாவதி, துரை கலந்து கொண்டு பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள் இறுதியில் ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
Next Story