search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் பாய்ந்து பிளஸ்-1 மாணவன் சாவு
    X

    மின்சாரம் பாய்ந்து பிளஸ்-1 மாணவன் சாவு

    • திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஷா என்பவரின் மகன் அசார் (வயது16).

    இவர் அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைபள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் அசார் குடும்பத்தினருடன் தும்பேரி அருகே நாதிகுப்பம் பகுதியில் நடைபெற்ற சிறுவனின் சித்தப்பா சையத் பாஷா என்பவரின் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்றார்.

    திருமண வறவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற தனியார் மண்டபத்தில் போடப்பட்டிருந்த பந்தல் அருகே சிறுவன் விளையாடிகொண்டிருந்த போது அங்குள்ள இரும்பு கம்பத்தை பிடித்துள்ளார்.

    அப்போது இரும்பு கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து அசார் மயங்கி கீழே விழுந்தான்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பலூர் போலீஸ் மாணவன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×