என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மிளகாய் பொடி வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை
- சாவியை எடுத்து மர்ம கும்பல் கைவரிசை
- கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஹாயாத் நகரை சேர்ந்தவர் பியாரோ(வயது 56). மிளகாய் பொடி வியாபாரி. இவரது மனைவி சமிம் இவர்களுக்கு இர்பான் என்ற மகனும், சல்லூர், நிகார், அம்ரின் 3 மகள்களும் உள்ளனர்.
வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நிகாரின் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. இதனால் அவருக்கு அணிவிப்ப தற்காக 8 பவுன் நகையை வாங்கி பீரோவில் வைத்திருந்தனர். இந்த நிலையில் கடைசி மகளான அம்ரினுக்கு ஆதார் கார்டு எடுக்க நேற்று திருப்பத்தூர் தலைமை தபால் நிலையத்திற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சாவியை அருகே உள்ள பாக்கெட்டில் வைத்தனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பக்கத்தில் இருந்து சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே புகுந்தனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
இன்று நிச்சயதார்த்த செலவிற்காக பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணத்தை தேடும் போது பணம், நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் மர்ம கும்பல் கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு பியாரோ தகவல் தெரிவித்தார். திருப்பத்தூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
வீட்டின் சாவியை எடுத்து பீரோவை திறந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்