என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மான் கொம்புகள் வைத்திருந்தவர் கைது
    X

    மான் கொம்புகள் வைத்திருந்தவர் கைது

    • வனத்துறையினர் ரோந்து பணியில் சிக்கினர்
    • 4 கொம்புகள் மற்றும் அறிவாள் பறிமுதல்

    ஆம்பூர்:

    திருப்த்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா குளிதிகை பகுதியில் ஆம்பூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காட்டுப் பகுதியில் சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சுந்தரேசன் (வயது 44) என்பதும் அவர் வைத்திருந்த பையில் 4 மான் கொம்புகள் இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 4 மான் கொம்புகள் மற்றும் அறிவாளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×