என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூரில் ஏ.ஐ.டி.யு.சி.- சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
    X

    திருப்பத்தூரில் ஏ.ஐ.டி.யு.சி.- சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்

    • நகராட்சி அலுவலகம் முன்பு கொடியேற்றினர்
    • ஒப்பந்த முறையை கைவிடக் கோரி நடந்தது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திருப்பத்தூர் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சிஐடியு, சங்கங்கள் சார்பில் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு கொடியேற்றினர்.

    பின்னர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பத்தூர் நகர துப்புரவு பணியாளர் சங்க தலைவர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    செயலாளர் ரவி பொருளாளர் ஆர் கோபி வரவேற்றனர் செயலாளர், கவுரவத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எம். சுந்தரேசன் கொடியேற்றி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மயில்வாகனன், அன்வர் பாஷா, பைரோஸ் உட்பட ஏராளமான துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சி.ஐ.டி.யு. சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட துணைதலைவர் பொன்னுசாமி, தலைமை வகித்தார் மாவட்டச் செயலாளர் எம் சரவணன், துணைத் தலைவர்கள் சின்னத்தம்பி சங்கர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் 12 மணி நேர வேலை நிறுத்தத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் திருப்பத்தூர் நகராட்சியில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரியும், காண்ட்ராக்ட் முறையை கைவிடக் கோரியும் தொழிலாளர்களை நிறுத்தக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

    பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

    Next Story
    ×