search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்ற வாலிபர் பலி
    X

    ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்ற வாலிபர் பலி

    • தடுப்புச் சுவரில் மோதி விபத்து
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பெரியமோட்டூர் டிஎக்ஸ்ஆர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு இவரது மகன் அரவிந்த் (வயது 27).

    இவர் ஈரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 1 ½ வருடங்களுக்கு முன்பு ஆனந்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 7 மாத ஆண் குழந்தை உள்ளது.

    அரவிந்த் கடந்த சனிக்கிழமை தனது குழந்தைக்கு குலம் தெய்வம் கோவிலுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக விடுமு றையில் வெள்ளிக்கிழமை இரவு வந்தார்.நேற்று தனது மோட்டார் சைக்கிளில் ஏலகிரி மலைக்கு சென்று சுற்றுலாத்தலங்களை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    சின்ன பொன்னேரி சுடுகாட்டு அருகே உள்ள சிறிய மேம்பாலம் தடுப்புச் சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

    இதனால் அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×