என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு 5-ந்தேதி விடுமுறை
- ராமலிங்கனார் நினைவு நாளையொட்டி மூட உத்தரவு
- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத் தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேன்டீன், அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகியவற்றை 5-ந்தேதி (ஞாயிற் றுக்கிழமை) வடலூர் ராமலிங்கனார் நினைவு நாளன்று மூட வேண்டும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் தெரிவித்து உள்ளார்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டு விற்பனை யின்றி மூடி வைக்கப்படும்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
Next Story