search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் மோதி 2 பேர் பலி
    X

    ரெயில் மோதி 2 பேர் பலி

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    குடியாத்தம் அடுத்த மேல்பட்டி வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கிடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதே போல லத்தேரி காவனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 45 வயது உடையவர் தண்டவாளத்தை கடக்கும் போது காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×