என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் வீரமாகாளி அம்மன் கோவில் கொடை விழா
    X

    வீரமாகாளி அம்மன்.


    திருச்செந்தூர் வீரமாகாளி அம்மன் கோவில் கொடை விழா

    • கொடை விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மனுக்கு மாகாப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
    • கும்பம் வீதி உலாவும், இரவு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் விஸ்வகர்மா சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மனுக்கு மாகாப்பு அலங்கார தீபாராதனையும், திங்கட்கிழமை இரவு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

    செவ்வாய்கிழமையன்று கொடை விழாவை முன்னிட்டு, கோவில் அதிகாலை நடைதிறக்கப் பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையாகியது. தொடர்ந்து கும்பம் வீதி உலாவும், இரவு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

    புதன்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமுதாயத் தலைவர் லெட்சுமணன் மற்றும் கொடை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×