என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரவிக்குமார்
திருச்செந்தூர் நகராட்சி பிளம்பர் தூக்கு போட்டு தற்கொலை - 8 மாதம் சம்பளம் வழங்காத விரக்தியில் விபரீதம்
- திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலை கிணறு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த 15 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பிளம்பிங் வேலைகள் செய்து வந்துள்ளார்.
- மன வருத்தத்தில் இருந்து வந்த ரவிக்குமார் நேற்று நடுநாலுமூலைகிணறு, புதுக்காலனியில் உள்ள அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலை கிணறு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 46).
இவர் திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த 15 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பிளம்பிங் வேலைகள் செய்து வந்துள்ளார்.
இவருக்கு கடந்த 8 மாதங்களாக திருச்செந்தூர் நகராட்சியில் இருந்து சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் நகராட்சி கமிஷனர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோரிடம் தனக்கு வர வேண்டிய பில் தொகையை பலமுறை கேட்டும் அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மன வருத்தத்தில் இருந்து வந்த ரவிக்குமார் நேற்று நடுநாலுமூலைகிணறு, புதுக்காலனியில் உள்ள அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில் திருச்செந்தூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து ரவிக்குமார் மகன் சரவணபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.