என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களக்காடு அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம்-செல்போன் பறிப்பு
Byமாலை மலர்23 Nov 2022 9:43 AM GMT
- நாங்குநேரியை அடுத்த வாகைகுளத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஆறுமுகநயினார்(வயது 34). இவர் சம்பவத்தன்று ஏர்வாடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- இதுதொடர்பாக ஆறுமுகநயினார் ஏர்வாடி போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நாங்குநேரியை அடுத்த வாகைகுளத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஆறுமுகநயினார்(வயது 34). இவர் சம்பவத்தன்று ஏர்வாடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அப்பகுதியில் மறைந்திருந்த 4 பேர் கும்பல் வழிமறித்தது. பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை பறித்துச்சென்றது.
இதுதொடர்பாக ஆறுமுகநயினார் ஏர்வாடி போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்டது சாத்தான்குளத்தை சேர்ந்த சூர்யா(23), மஞ்சன்குளத்தை சேர்ந்த தளவாய் பாண்டியன்(23), கண்ணன் மற்றும் ஏர்வாடியை சேர்ந்த நம்பி நாராயணன் என்பது தெரியவந்தது. அதில் நம்பி நாராயணனை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X