search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரத்தில் காற்றாலை உரிமையாளருக்கு மிரட்டல்; தொழிலதிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு
    X

    ராதாபுரத்தில் காற்றாலை உரிமையாளருக்கு மிரட்டல்; தொழிலதிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு

    • 2 தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
    • ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை போலீஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 52). இவருக்கு சொந்தமான இடம் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூரில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், கிருஷ்ணனின் இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் காற்றாலை அமைத்திருந்தார். சமீபத்தில் 2 தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அவர்களிடம் கிருஷ்ணன் தட்டிக்கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான தனது காற்றாலை எந்திரங்களை தொழிலதிபர் ஏமாற்றி அபகரித்ததாக கூறி கிருஷ்ணன் ராதாபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, திருப்பூரை சேர்ந்த தியாகராஜன், காங்கேயத்தை சேர்ந்த அருணாதேவி, பாளை தியாகராஜநகரை சேர்ந்த மாணிக்க வாசகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    Next Story
    ×