search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓட்டம்
    X

    தியாகதுருகம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓட்டம்

    • 9 மோட்டார் சைக்கிள் பறிமுதல்
    • போலீசார் பிரிதிவிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி கண்டன் தலைமையிலான போலீசார் பிரிதிவிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காலனி தகன மேடை அருகே சிலர் அமர்ந்து கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 10- க்கும் மேற்பட்ட வர்கள் தப்பி ஓடினர். போலீசார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பழனிமுத்து மகன் வரதன் (வயது 38) உள்ளிட்டோர் தப்பி ஓடியது தெரியவந்தது. அங்கிருந்த ரூ.560 பணம் மற்றும் 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் வரதன் உள்ளிட்ட தப்பி ஓடிய வர்களை தேடி வருகின்ற னர்.

    Next Story
    ×