search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி பள்ளி மாணவ-மாணவிகள் பிரதமர் யாசவி தேர்வில் சாதனை
    X

    தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.

    திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி பள்ளி மாணவ-மாணவிகள் பிரதமர் யாசவி தேர்வில் சாதனை

    • மத்திய அரசால் நடத்தப்படும் பிரதமர் யாசவி தேர்வு தேசிய அளவில் நடைபெற்றது.
    • ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சுபாஷ் கண்ணன் பொது பிரிவில் தமிழ்நாடு அளவில் 18-வது இடத்தையும், பொருளாதார அளவில் பின்தங்கிய பிரிவில் பூஜா என்ற மாணவி 5 -வது இடத்தையும் பிடித்தனர்.

    சங்கரன்கோவில்:

    மத்திய அரசால் நடத்தப்படும் பிரதமர் யாசவி தேர்வு தேசிய அளவில் நடைபெற்றது. இந்த தேர்வில் 9 மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தமிழ்நாடு அளவில் 9-ம் வகுப்பில் 170 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 9-ம் வகுப்பில் தேர்வெழுதிய ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சுபாஷ் கண்ணன் பொது பிரிவில் தமிழ்நாடு அளவில் 18-வது இடத்தையும், பொருளாதார அளவில் பின்தங்கிய பிரிவில் பூஜா என்ற மாணவி 5 -வது இடத்தையும் பிடித்தனர். தமிழ்நாடு அளவில் 11-ம் வகுப்பில் 251 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 20 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக வித்யா என்ற மாணவி பொது பிரிவில் தமிழ்நாடு அளவில் 18-வது இடத்தையும், முத்துலட்சுமி என்ற மாணவி பொருளாதார அளவில் பின்தங்கிய பிரிவில் 15-வது இடத்தையும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 22 மாணவ, மாணவிகள் பிரதமர் யாசவி உதவித்தொகைக்கு பெற தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் பெற்றோர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×