என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி
- நண்பர்களுடன் ஆற்றிற்கு குளிக்க சென்ற 10-ம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.
- பார்த்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் லாரன்ஸ் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள தென் குவளைவேலி மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் லாரன்ஸ் (வயது 14). இவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார்.
சம்பவத்தன்று நீடாமங்க லம் அடுத்த எருமைபடுகை கிராமத்தில் உள்ள ஆற்றில் தனது நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென தண்ணீரின் சுழலில் லாரன்ஸ் சிக்கினார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் லாரன்ஸ் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து லாரன்சை தேடினர். இரவு வெகு நேரமாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் இன்று காலை லாரன்ஸ் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து அரித்துவார மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்