என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
By
மாலை மலர்24 Oct 2023 1:15 PM IST

- மரத்தை வெட்டிக் கொண்டிருந்தபோது பரிதாபம்
- செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் அடுத்த அரசாணை பாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 27). சிப்காட்டில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவருக்கு வீட்டின் அருகே சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தில் மரங்கள் வளர்ந்திருந்தது. அதனை வெட்டுவதற்காக நேற்று முன்தினம் நிலத்திற்கு சென்றார். மரத்தை வெட்டிக் கொண்டிருந்தபோது அந்த மரம் அருகே இருந்த மின்சார கம்பி மீது விழுந்தது.
திடீரென கோபாலகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X