search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி
    X

    தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி

    • ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன் கோனாரின் ராயன் குளக்கரை ஒட்டி உள்ள கிடங்கு தெரு பகு தியை சேர்ந்தவர் முத்து (வயது 25.

    இவர் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள புளிரம்பாக் கம் ஏரியில் நண்பருடன் மீன் பிடிக்க சென்றார். அப்போது ஏரி நீரில் இறங்கினார். சிறிது தூரம் சென்ற அவர் கால் தவறி சேற்றில் சிக்கி மூழ்கினார். இதுகுறித்து அவரது நண்பர் செய்யாறு தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். சேற்றில் சிக்கிய முத்துவை சுமார் 2 மணி நேரமாக தேடினர்.

    இருள் சூழ்ந்ததாலும் போதியம் வெளிச்சம் இல்லாததாலும் தேடும் பணி கைவிடப்பட்டது.

    மீண்டும் இன்று காலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சிறிது நேர தேடலுக்குப் பிறகு முத்துவை பிணமாக மீட்டனர்.

    இது குறித்து செய்யாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துவின் உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×