search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய்மாமனை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது
    X

    தாய்மாமனை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது

    • சொத்து தகராரில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த அரசு ஆணை பாளை யத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 33).தொழிலாளி. இவரது தாய்மாமன் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (48).

    இந்த நிலையில் நேற்று ராஜேந்திரனிடம் சரத்குமார் சென்று சொத்து கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த சரத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேந்திரனை வெட்டியுள்ளார். இதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×