search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
    X

    கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

    • எதிர்பாராத விதமாக விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் அடுத்த அல்லி நகரை சேர்ந்தவர் பழனி (வயது 45). இவர் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி வசந்தி, வினோத், விக்னேஷ் என 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று மாலை பழனி அதே பகுதியில் உள்ள கிணற்றின் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதனைக் கண்ட அவரது மகன்கள் கத்தி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் கிணற்றில் விழுந்த பழனியை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் போளூர் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பழனி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பழனி உடலை மீட்டு உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×