என் மலர்
உள்ளூர் செய்திகள்

கணவர் மீது மனைவி புகார்
- சரமாரியாக தாக்கியதால் ஆத்திரம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த இருமல் தாங்களை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 28). இவரது மனைவி நந்தினி (வயது 25). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் நந்தினி செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.
அப்போது விக்னேஷை வரவழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கனவருடன் நந்தினியை போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் வரும் வழியில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது விக்னேஷ் நந்தினியை கீழே தள்ளி தாக்கினார். இதில் நந்தினி மற்றும் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த தாய், மகளை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் செய்யாறு டவுன் போலீஸ் நிலையத்தில் நந்தினி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






