search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்
    X

    விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்

    • 18-ந் தேதி நாடு முழுவதும் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது
    • சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகிற 18-ந் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நிலையில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்வதற்காக வந்தவாசி சன்னதி தெருவில் மாசு இல்லாத பேப்பர் கூழ் கொண்டு விதவிதமான விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    அவ்வகையில் எலி வாகன பிள்ளையார், மயில்வாகன பிள்ளையார், சிம்ம வாகன பிள்ளையார், குழந்தை பிள்ளையார், மும்மூர்த்தி பிள்ளையார், விநாயகர் சிலைகள் சிலை வடிவமைப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பலவிதமான வண்ணங்களை கொண்டு தயாராகும் விநாயகர் சிலைகளை வந்தவாசி சுற்றியுள்ள சென்னாவரம், பிருதூர், மருதாடு, தென்னாங்கூர், தெள்ளார், பொண்ணூர், கீழ் கொவளைவேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் வாங்கி செல்வார்கள் என்று சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×