search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    • நண்பருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒப்பந்தவாடியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 48). திருப்பதியில் பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மகன் தமிழரசன் (21). இவர் செய்யாறு கன்னியம்மன் கோவில் தெருவில் பாட்டி வீட்டில் தங்கி பட்டப்படிப்பை முடித்து வேலை தேடி வந்தார்.

    சென்னைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறினார். நேற்று இரவு சென்னையில் உள்ள தனது நண்பருக்கு போன் செய்து எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நான் தூக்கு போட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து செய்யாறில் உள்ள நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக நண்பர்கள் தமிழரசன் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அப்போது தமிழரசன் தூக்கு போட்டு தொங்கி நிலையில் கிடந்தார்.

    அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தமிழரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து செய்யாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தமிழரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×