search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
    X

    மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

    • விநாயகர் சதுர்த்தி விழாவில் பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    புதுப்பாளையம்:

    செங்கம் அடுத்த பெரிய தள்ளபாடியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 18).

    இவர் முன்னூர்மங்கலம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அருகே உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்தார்.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி அப்பகுதியில் வீட்டின் அருகே நண்பர்களுடன் சேர்ந்து விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வந்தார். நேற்று மாலை விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக மைக் செட் ஒலி, ஒளி அமைக்கப்பட்டு இருந்தது.

    மதன்குமார் மைக்கை கையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த மைக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. இதில் மதன் குமார் தூக்கி வீசப்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

    உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மதன் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து புதுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதன்குமாரின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×