search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்காட்டுப்பள்ளி அரசு கல்லூரியில் 30-ந்தேதி மாணவர் சேர்க்கை தொடக்கம்
    X

    திருக்காட்டுப்பள்ளி அரசு கல்லூரியில் 30-ந்தேதி மாணவர் சேர்க்கை தொடக்கம்

    • ஜூன் 9-ந்தேதி பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கில பிரிவிற்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
    • அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் குறிப்பிட்ட தேதியில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்து கல்லூரி முதல்வர் ராஜா வரதராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

    பூதலூர் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு 2023-24 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வரும் 30-ந்தேதி தொடங்குகிறது. வரும் 30-ந்தேதி காலை 9 மணிக்கு சிறப்பு ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

    அதனை தொடர்ந்து ஜூன் முதல் தேதி பி.காம் ,பிபிஏ பிரிவுகளுக்கும் ,ஜூன் 8-ம் தேதி பி.எஸ்.சி.கணினி அறிவியல் பிரிவுக்கும், ஜூன் 9-ஆம் தேதி பிஏ தமிழ் மற்றும் ஆங்கில பிரிவிற்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

    இணைய வழியில் விண்ணப்பம் அனுப்பிய விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு வரும் பொழுது தங்களின் கல்வித் தகுதி குறித்த 10ம் வகுப்பு 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் ,மாற்றுச் சான்றிதழின் அசல் மற்றும் நகல், இனச் சான்றிதழ், ஆதார் அட்டை மாணவர்களின் புகைப்படங்கள் இரண்டு, சிறப்பு ஒதுக்கீடு கோருப வர்கள் அதற்கான சான்றிதழ்களுடன் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு நடப்பு ஆண்டு மொத்தம் 3376 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.

    இதில் கணினி அறிவியல் பிரிவு கோரி 753 விண்ணப்பங்களும், இளங்கலை தமிழ் படிக்க 751 விண்ணப்பங்களும், வணிக நிர்வாகவியல் (பிபிஏ) படிக்க 648 விண்ணப்ப ங்களும், வணிகவியல் (பிகாம்) படிக்க 585 பேரும், பி.ஏ.ஆங்கிலம்படிக்க 4 54 விண்ணப்பங்களும், சிறப்பு பிரிவினர் 185 பெரும் விண்ணப்பித்துள்ளனர்.

    விண்ணப்பதாரர்கள் அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் உடன் இரண்டு புகைப்படங்களுடன் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×