search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்
    X

    விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

    சித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்

    • ஸ்ரீதெட்சணாமூர்த்தியை பிரார்த்தனை செய்து கொண்டால் திருமணம் கைகூடிவரும் என்பது ஐதீகம்.
    • சுவாமிக்கு அம்பாள் சித்திலெட்சுமி, புத்திலெட்சுமியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    மெலட்டூர்:

    மெலட்டூர் ஸ்ரீசித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோயிலில் சுவாமி தெட்சணாமூர்த்திக்கு, சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் உள்ள ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் விவாஹ வரம் அருளக்கூடியவர். இங்கு ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபத்தில் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீதெட்சணாமூர்த்தியை பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடிவரும் என்பது ஐதீகம்.

    நேற்று காலை சுவாமி தெட்சணாமூர்த்திக்கு சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. திருக்கல்யா ண வைபவத்தை முன்னிட்டு பக்தர்கள் சீர்வரிசை தட்டு, தாம்பலம் எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து சகல சடங்கு, சம்பிரதாயங்கள்படி சுவாமிக்கு அம்பாள் சித்திலெட்சுமி, புத்திலெட்சுமியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    திருக்கல்யாண வைப வத்தில் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண வைபவ ஏற்பாடுகளை எஸ்.குமார் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×