விழுப்புரம், பண்ருட்டியில் கைவரிசை 20 இடங்களில் திருடிய கொள்ளையன் கைது

20 இடங்களில் திருடிய கொள்ளையன் கைது. மொத்தம் 20இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு கொள்ளை யடித்தது தெரியவந்தது. ,
விழுப்புரம், பண்ருட்டியில் கைவரிசை 20 இடங்களில் திருடிய கொள்ளையன் கைது
Published on

க்டலூர்:

பண்ருட்டி அருகே கொங்கராய னூரில்கடந்த 2021-ம் ஆண்டு லாலாப்பேட்டை யை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை தாக்கி வழிபறிகொள்ளை நடந்ததுஇந்த வழக்கில் சம்மந்தபட்டகீழ்பூத்தமங்கலம்விஜயகுமார் என்பவரைடிஎஸ்பி சபிபுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்.இன்ஸ்பெக்டர்தங்கவேல், ஏட்டு ஜோதி மற்றும் அன்பரசன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர் 

இவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.விசாரணையில் கடலூர் மாவட்டத்தில் திருப்பாப்புலியூர்,நெல்லிகுப்பம், நெய்வேலி டவுன்ஷிப், குறிஞ்சிப்பாடி, விருதாச்சலம், பண்ருட்டியில் 9 இடங்களிலும் விழுப்புரம் மாவட்டத்தில் மைலம்,வானூர், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம் பகுதியில் 7 இடங்களிலும், கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் பகுதியில் 2 இடங்களிலும் மொத்தம் 20இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு கொள்ளை யடித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவனை கைது செய்து அவனிடமிருந்து கொள்ளையடித்த பணம் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com