என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி மாதா ஆலயம் அருகே உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு
    X

    கோத்தகிரி மாதா ஆலயம் அருகே உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு

    150 ஆண்டுகள் பழமையான புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது.

    நீலகிரி கோத்தகிரி கோத்தகிரி பஸ் நிலையம் அருகே 150 ஆண்டுகள் பழமையான புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு அருகே 2 தனியார் பள்ளிகள் மற்றும் ஏராளமான குடியிருப்புக்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இங்குள்ள பள்ளி மற்றும் குடியிருப்புக்கு செல்லும் கான்கிரீட் நடைபாதையில் சிறுத்தை ஒன்று மெதுவாக நடந்து சென்றது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அங்கிருந்த ஒருவர் சற்று தொலைவில் இருந்து அந்த சிறுத்தையை தனது செல்போனில் படம் பிடித்தார். இது குறித்த தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும் பள்ளிகள் மற்றும் குடியிருப்புக்கள் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் சிறுத்தை உலா வந்ததால், அவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களை சிறுத்தை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சிறுத்தையின் நடமாட்டத்தைக் வனத்துறையினர் கண்காணித்து சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ அல்லது கூண்டு வைத்துப் பிடிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×