search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் திருட்டு
    X

    தூத்துக்குடியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் திருட்டு

    • சிவநாராயணன் மெக்கானிக்கை வரவழைத்து பஞ்சர் ஒட்டிவிட்டு அருகே உள்ள மருந்து கடைக்கு சென்றுள்ளார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் சிவ நாராயணன் (வயது 35). இவர் அப்பகுதியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்தார். பின்னர் வெளியே வந்த போது அவரது மோட்டார் சைக்கிள் பஞ்சராகி நின்றது.

    உடனே மெக்கானிக்கை வரவழைத்து பஞ்சர் ஒட்டிவிட்டு அருகே உள்ள மருந்து கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் முன்புற கவரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை காணவில்லை.

    மர்மநபர்கள் நோட்டம் போட்டு அந்த பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×