search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனைமலையில் ஓட்டல்  மாஸ்டருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்
    X

    ஆனைமலையில் ஓட்டல் மாஸ்டருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்

    • இளம்பெண் அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் கடந்த ஒரு ஆண்டாக வேலை பார்த்து வந்தார்.
    • இளம்பெண்ணை அவரது கணவர் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி விட்டார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இளம்பெண் அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் கடந்த ஒரு ஆண்டாக வேலை பார்த்து வந்தார். அப்போது அதே ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்த சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    இளம்பெண் வாலிபரை அடிக்கடி தனிமையில் சந்தித்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.

    இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் இளம்பெண்ணை அவரது கணவர் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி விட்டார். ஆனால் இளம்பெண் தனது கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார்.

    சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று இருந்தார். அப்போது இளம்பெண் தனது அம்மாவிடம் மகனை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    மனைவி மற்றும் மகன் மாயமானது கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×