search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த பெண் ஐ.டி. ஊழியர்
    X

    கோவையில் வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த பெண் ஐ.டி. ஊழியர்

    • இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
    • ரொம்ப சாரி அம்மா... மன்னித்து விடு... என குறுஞ்செய்தி அனுப்பினார்

    கோவை,

    கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபரு டனான காதலை கைவிடுமாறு கூறினர். ஆனால் இளம்பெண் தனது பெற்றோருக்கு தெரியாமல் காதலை தொடர்ந்து வந்தார். இந்தநிலையில் இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    அதன்படி பெரியநாயக்கன்பாளையம் பகுதிையச் சேர்ந்த வாலிபர் ஒருவரை மணமகனாக பார்த்து வருகிற நவம்பர் மாதம் 19-ந் தேதி திருமணம் செய்வது என பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயம் செய்தனர். இ னால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். திருமணத்துக்கு முன்பு தனது காதலனுடன் சென்று விட முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் பிரித்து விடு வார்கள் என்ற பயத்தில் இருந்த காதலர்கள் அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு இளம்பெண் தனது தாயின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினார்.

    அதில் நானும், காதலித்த வாலிபரும் திருமணம் செய்து கொண்டோம். ரொம்ப சாரி அம்மா, மன்னித்து விடு என அனுப்பி இருந்தார். பின்னர் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. திருமணம் நிச்சயம் ஆன நிலையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மகளை கண்டுபிடித்து தரும்படி பெண்ணின் தந்தை வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த காதலர்கள் வடவள்ளி போலீஸ் நிலையத்துக்கு மணக்கோலத்தில் வந்தனர். போலீசாரிடம் இளம்பெண் தனது கணவருடன் செல்வதாக கூறினார். இதனையடுத்து போலீசார் இளம்பெண்ணை காதலனுடன் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×