search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு நடைமேடை அமைக்க வேண்டும்
    X

    குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு நடைமேடை அமைக்க வேண்டும்

    • நடை மேடை அமைக்க கோரி கோவை மாநகராட்சிக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் பயணிப்பதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூரில் மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    காலை மற்றும் மாலை பள்ளி விடும் நேரத்தில், பள்ளி குழந்தைகள் சாலையை கடந்து செல்லும் போது சிறுசிறு விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் மாலையில் பள்ளி விடும் சமயத்தில் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது.

    இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் பயணிப்பதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.இதனால் பள்ளி முன்பாக நடைமேடை அமைக்கப்பட்டால் பள்ளி குழந்தைகள் நடை மேடை வழியாக சாலையை கடந்து, மறுபுறம் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

    குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே பயன்பாட்டில் இல்லாமல் ஒரு இரும்பால் ஆன நடைமேடை உள்ளது. கடந்த 5 வருடத்திற்கும் மேலாக நடைமேடை யாருக்கும் பயனில்லாமல் வீணாக நின்று கொண்டிருக்கிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் இந்த நடைமேைடயை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். நடைமேடை மேலே ஏறி நின்று பார்த்தால் பாட்டில்களையும் பிளாஸ்டிக் கப்புகளையும் காண முடிகிறது.

    இத்தகைய சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அப்புறப்படுத்தி குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக இந்த நடைமேடையை அமைத்தால் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும் என்று பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×